sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மணவாள பெருமாளுக்கு புதிய கருட வாகனம்

/

மணவாள பெருமாளுக்கு புதிய கருட வாகனம்

மணவாள பெருமாளுக்கு புதிய கருட வாகனம்

மணவாள பெருமாளுக்கு புதிய கருட வாகனம்


ADDED : ஜன 03, 2025 01:47 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், கமலவல்லி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 2022 ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

சுவாமி வீதியுலா செல்வதற்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த பெருமாள் பக்தர்சங்கர் என்பவர் ஐந்தடிஉயரமும், நான்கு அடி அகலம் கொண்டஅத்தி மரத்தால் செய்யப்பட்ட புதிய கருட வாகனத்தை கோவில் அறங்காவலர் அமரேசனிடம் உபயமாக வழங்கினார்.

கோவிலுக்கு புதிதாக வழங்கப்பட்ட கருடவாகனத்தின் கரிகோலம்நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது. இதில், பல்வேறு பூஜைகள்செய்யப்பட்டு ஏரிவாய், முத்தியால்பேட்டை பகுதியில்முக்கிய வீதி வழியாகஉலா வந்த கருட வாகனத்திற்கு வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்திஎடுத்து வழிபட்டனர்.

வரும் 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அழகிய மணவாள பெருமாள் புதிய கருட வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார். மேலும்,விசேஷ நாட்களிலும், பெருமாள் கருட வாகனத்தில் வீதிஉலா வருவார் என, கோவில் அறங்காவலர் அமரேசன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us