sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதி ஆற்று சிறுபாலத்திற்கு புதிதாக தடுப்புச்சுவர் அமைப்பு

/

வேகவதி ஆற்று சிறுபாலத்திற்கு புதிதாக தடுப்புச்சுவர் அமைப்பு

வேகவதி ஆற்று சிறுபாலத்திற்கு புதிதாக தடுப்புச்சுவர் அமைப்பு

வேகவதி ஆற்று சிறுபாலத்திற்கு புதிதாக தடுப்புச்சுவர் அமைப்பு


ADDED : ஏப் 17, 2025 12:41 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் தாயார் குளத்திற்கு செல்லும் சாலையில் வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் சிறுபாலம் அமைந்துள்ளது. இப்பாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், இரவு நேரத்தில் இப்பாலத்தை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் இருந்தது.

இதனால், இப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில், பொது நிதியில் இருந்து, சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்தனர்.

தடுப்பு கம்பிகளுக்கும், சுவர்களுக்கும் வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் சிறுபாலம் வாகன போக்குவரத்துக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிததார்.






      Dinamalar
      Follow us