sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கடல்மங்கலத்தில் மண் அரிப்பால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்

/

கடல்மங்கலத்தில் மண் அரிப்பால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்

கடல்மங்கலத்தில் மண் அரிப்பால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்

கடல்மங்கலத்தில் மண் அரிப்பால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதம்


ADDED : நவ 10, 2025 01:00 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: கடல்மங்கலத்தில் மண் அரிப்பால், புதிதாக அமைக் கப்பட்ட சாலை சேதம் அடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர் தாலுகா, கடல்மங்கலத்தில் தோட்ட நாவல் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி ஆலஞ்சேரி, பாலேஸ்வரம், குண்ணவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்தோர், உத்திரமேரூர், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல, சுற்று வட்டார கிராமங்களில் உள்ள, கல் குவாரிகளில் இயக்கப்படும் லாரிகளும் இவ்வழியே செல்கின்றன.

எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலை, ஓராண்டிற்கு முன் சேதமடைந்து இருந்தது. இச்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 1.81 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலையின் இருபுறமும், சரியாக மண் கொட்டி சீரமைக்காமல் விடப்பட்டுள்ளது.

இதனால், 10 நாட்களுக்கு முன் பெய்த மழையின்போது, மூன்று இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலையோரம் சேதமடைந்துள்ளது.

இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சேதமடைந்துள்ள சாலை பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, கடல்மங்கலத்தில் மண் அரிப்பால் சேதமடைந்த தார்ச் சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.






      Dinamalar
      Follow us