/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபால சுற்றுச்சுவரை உயர்த்த ஓரிக்கைவாசிகள் எதிர்பார்ப்பு
/
சிறுபால சுற்றுச்சுவரை உயர்த்த ஓரிக்கைவாசிகள் எதிர்பார்ப்பு
சிறுபால சுற்றுச்சுவரை உயர்த்த ஓரிக்கைவாசிகள் எதிர்பார்ப்பு
சிறுபால சுற்றுச்சுவரை உயர்த்த ஓரிக்கைவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 23, 2024 12:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை வழியாக, ஓரிக்கை, குருவிமலை, களக்காட்டூர், பெரியநத்தம், மேல்பேரமநல்லுார், ஆற்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில், ஓரிக்கை பழைய காலனி அருகே, சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், சிறுபாலத்தின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்புச்சுவரும் உயரம் மிகவும் குறைவாக உள்ளது.
இதனால், வேகமாக செல்லும் வாகனங்கள், சிறுபாலம் பகுதியில் ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் உயரம் குறைவாக உள்ள பகுதி வழியாக நிலைதடுமாறி கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோரம் உள்ள சிறுபாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.