/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
11 ஊராட்சிகளில் வரும் 8ல் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை
/
11 ஊராட்சிகளில் வரும் 8ல் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை
11 ஊராட்சிகளில் வரும் 8ல் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை
11 ஊராட்சிகளில் வரும் 8ல் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை
ADDED : நவ 05, 2024 07:47 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.
தற்போது, ஒன்பதாவது சுற்றுக்கு ஆசூர், அவளூர், திருவங்கரணை, அயிமிச்சேரி, காட்ரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, அமரம்பேடு, சேத்துப்பட்டு, கட்டியம்பந்தல், தோட்ட நாவல், பெருங்கோழி ஆகிய 11 ஊராட்சிகளில் சமூக தணிக்கை நடைபெறுகிறது.
நவ., 8ல் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.