/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
/
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : அக் 13, 2025 01:15 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால், விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம், பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.
ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிப்புரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த முக்கிய சாலையில், போக்குவரத்து விதிகளை மீறி, லாரிகளில் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வது வழக்கமாகி விட்டது.
குறிப்பாக, வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து, ஜல்லி, கருங்கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை லாரிகளில் அளவிற்கு அதிகமாக ஏற்றி சென்று வருகின்றன.
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், லாரிகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அதிவேகமாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
இதை கண்காணிக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, விதிமுறைகளை மீறி, அதிக பாரம் ஏற்றி அதிவேகமாக செல்லும் லாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.