sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அவளூரில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

அவளூரில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

அவளூரில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

அவளூரில் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 22, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 22, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த, அவளூர், கண்ணடியன்குடிசை, நெய்க்குப்பம் மற்றும் அங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இப்பகுதிகளில், கிணறு மற்றும் பாலாற்று பாசனம் வாயிலாக, பல ஏக்கர் பரப்பில் விவசாயிகள், முப்போகம் நெல் சாகுபடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நடப்பு ஆண்டு சம்பா பட்டத்திற்கு, கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் நடவு செய்த நெல் பயிர்கள், சில இடங்களில் அறுவடை பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன.

மேலும், இப்பகுதி 80 சதவீத நிலங்களில், தற்போது நெல்கதிர் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதனால், விவசாயிகளும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளனர்.

இக்கிராமங்களில் அறுவடையான நெல்லை, அவளூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.

நடப்பாண்டிற்கு இன்னும் அவளூர் பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், விவசாயிகள் நெல் அறுவடை செய்வதில் தாமதம் காட்டி வருகின்றனர்.

எனவே, அவளூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டும் என, அவளூர், அங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us