/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் தொள்ளாழியில் துவக்கம்
/
நெல் கொள்முதல் நிலையம் தொள்ளாழியில் துவக்கம்
ADDED : ஏப் 20, 2025 07:10 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி, தோண்டாங்குளம், உள்ளாவூர், ஆம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் இரண்டு போகம் சாகுபடி செய்கின்றனர்.
இப்பகுதிகளில், கடந்த பருவ மழையை தொடர்ந்து, நவரை பட்டத்திற்கு, கடந்த டிசம்பரில், 500 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
அப்பயிர்கள் கதிர் முற்றிய நிலையில், சில தினங்களாக அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். இப்பகுதியில், அறுவடையான நெல்லை, ஆண்டுதோறும் தொள்ளாழி பகுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொள்முதல் செய்வது வழக்கம்.
அதன்படி, தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய விரைவாக தொள்ளாழியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, தொள்ளாழி கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார்.
அப்பகுதி ஊராட்சி தலைவர் அசினா பேகம், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றியக் குழு துணை தலைவர் சேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

