sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையங்கள் 22 இடங்களில் திறப்பு

/

நெல் கொள்முதல் நிலையங்கள் 22 இடங்களில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் 22 இடங்களில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் 22 இடங்களில் திறப்பு


ADDED : செப் 02, 2025 01:23 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், -உத்திரமேரூர் ஒன்றியத்தில், 22 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.

உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, இந்த கிராமங்களில் 12,000 ஏக்கர் பரப்பளவில், சொர்ணவாரி பருவ நெற்பயிர் நடவு செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய, நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், வேடபாளையம், மருத்துவன்பாடி, தளவராம்பூண்டி உட்பட 22 இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.

உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியக் குழு சேர்மன் ஹேமலதா, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us