/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு பெருநகரில் விமரிசை
/
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு பெருநகரில் விமரிசை
ADDED : பிப் 15, 2025 12:34 AM

பெருநகர்:காஞ்சிபுரம் -வந்தவாசி சாலை, பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச பெருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஐந்தாம் நாள் உற்சவமான, பிப்., 6ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் உற்சவமான பிப்., 8ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, பிப்., 10ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது.
இதில், 10ம் நாள் திருவிழாவில், 25 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா கடந்த 12ம் தேதி அதிகாலை விமரிசையாக நடந்தது. 12ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விமரிசையாக நடந்தது.
பிரம்மபுரீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், பட்டுவதனாம்பிகை சந்திர பிரபையிலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய ரிஷப வாகனத்திலும் என, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.