sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் நிறைவு

/

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் நிறைவு

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் நிறைவு

யதோக்தகாரி பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் நிறைவு


ADDED : மார் 31, 2025 11:54 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான மார்ச் 24ம் தேதி காலை கருடசேவை உத்சவமும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும் நடந்தது. ஏழாம் நாள் உத்சவமான மார்ச் 28 ம் தேதி காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ஒன்பதாம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை ஆள்மேல் பல்லக்கும், தொடர்ந்து பொய்கையாழ்வார் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது.

இதில், பிரம்மோத்சவம் நிறைவு நாளான நேற்று, மதியம் 2:00 மணிக்கு திருவாய்மொழி சாற்றுமறை நடந்தது. மாலை வெட்டிவேர் சப்பரத்தில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி யதோத்காரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

கடந்த 10 நாட்களாக நடந்து வந்த பிரம்மோத்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாட்டை நல்லப்பா பாஷ்யகாரர் திருவம்சத்தார் பரம்பரை தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us