sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்விளக்கு இல்லாத சாலையால் பீதி

/

மின்விளக்கு இல்லாத சாலையால் பீதி

மின்விளக்கு இல்லாத சாலையால் பீதி

மின்விளக்கு இல்லாத சாலையால் பீதி


ADDED : ஜன 03, 2025 07:47 PM

Google News

ADDED : ஜன 03, 2025 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அருகே சங்கராபுரம் கூட்டுச்சாலை உள்ளது. இப்பகுதியில் இருந்து சங்கராபுரம், லிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தேவரியம்பாக்கம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.

சங்கராபுரம் சுற்றுவட்டார கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும், சங்கராபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், தேவரியம்பாக்கம் வழியாக வாரணவாசி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இரவு, பகலாக பணிக்கு சென்று திரும்புகின்றனர்.

இந்த வழித்தடத்தில், குடியிருப்புகள் உள்ளடங்கிய பகுதிகளை தவிர்த்து, மற்ற சாலை பகுதிகளில் மின்விளக்கு வசதி இல்லாத நிலையை தொடர்கிறது.

இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மின் வசதி இல்லாததால், சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என அச்சப்படுகின்றனர்.

எனவே, சங்கராபுரம்- - தேவரியம்பாக்கம் இணைப்பு சாலையில், மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us