sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரைகுறையாக தடுப்புசுவர் சீரமைப்பு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

/

அரைகுறையாக தடுப்புசுவர் சீரமைப்பு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

அரைகுறையாக தடுப்புசுவர் சீரமைப்பு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

அரைகுறையாக தடுப்புசுவர் சீரமைப்பு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி


ADDED : ஜூலை 23, 2025 12:36 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கம்பன் கால்வாய் தரைப்பாலம் தடுப்பு சுவர் அரைகுறையாக நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்திருப்பதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம், கூரம், பெரியகரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.

இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் மூலம், 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வடகிழக்கு பருவ மழை காலங்களில், கம்பன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை கடந்து செல்வதற்கு சவுகரியமாக, கூரம், விஷகண்டிகுப்பம், பரந்துார், மதுமரங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், கம்பன் கால்வாய் குறுக்கே உயர் மட்ட தரைப்பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதில், கூரம் - ஒழுக்கோல்பட்டு கிராமம் இடையே, கம்பன் கால்வாய் குறுக்கே, தடுப்பு சுவருடன்கூடிய பாலம் உள்ளது. இந்த தரைப் பாலத்தின் தடுப்பு சுவர் மீது, கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதம் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஏற்று, நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் சமீபத்தில் சுண்ணாம்பு அடித்துள்ளனர். தரைப்பால தடுப்பு சுவர் விரிசலை சீரமைக்கவில்லை.

இதனால், கூரம் - ஒழுக்கோல்பட்டு கிராமம் இடையே, தடுப்பு சுவரின் பாதுகாப்பு வாகன ஓட்டிகளுக்கு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, கூரம் - ஒழுக்கோல்பட்டு இடையே, கம்பன் கால்வாய் தரைப்பாலம் தடுப்பு சுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us