sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அமராவதிபட்டணத்தில் ரூ.7 லட்சத்தில் பயணியர் நிழற்குடை

/

அமராவதிபட்டணத்தில் ரூ.7 லட்சத்தில் பயணியர் நிழற்குடை

அமராவதிபட்டணத்தில் ரூ.7 லட்சத்தில் பயணியர் நிழற்குடை

அமராவதிபட்டணத்தில் ரூ.7 லட்சத்தில் பயணியர் நிழற்குடை


ADDED : நவ 10, 2025 01:04 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: அமராவதிபட்டணத்தில், 7 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக பயணியர் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நெல்வாய் -- திருமுக் கூடல் சாலை, அமராவதிபட்டணத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, அப்பகுதி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த பேருந்து நிறுத்தத்தில் நீண்ட ஆண்டுகளாக, பயணியர் நிழற்குடை இல்லாமல் இருந்தது. இதனால், பேருந்துக்காக வரும் மக்கள், வெயில் மற்றும் மழை நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தை பிடித்து சென்றனர்.

எனவே, அமராவதி பட்டணம் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், கனிம வள நிதியின் கீழ், 7 லட்சம் ரூபாய் செலவில், பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள், இரண்டு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டன.

தற்போது, கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயணியர் நிழற்குடை பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது.

இது குறித்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவேலு கூறுகையில், ''அமராவதிபட்டணத்தில், 7 லட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணியர் நிழற்குடை இன்னும் ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us