/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ் நிலையத்தில் சேதமான சாலை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
/
பஸ் நிலையத்தில் சேதமான சாலை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
பஸ் நிலையத்தில் சேதமான சாலை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
பஸ் நிலையத்தில் சேதமான சாலை சீரமைக்க பயணியர் வலியுறுத்தல்
ADDED : அக் 08, 2024 12:44 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதில், பேருந்து நிலையத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகில், மழையின் காரணமாக மண் அரிப்புஏற்பட்டு சாலையில்பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், பேருந்தை பிடிக்க ஓடும் பயணியர் கவனகுறைவாக பள்ளத்தில் கால் இடறி, தவறி விழுந்து காயமடைகின்றனர்.
அதேபோல, இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்துஏற்படுத்தும் வகையில், பல்லாங்குழி சாலையாகமாறியுள்ள பேருந்து நிலைய சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.