sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க மனு

/

பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க மனு

பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க மனு

பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை காஞ்சி வரை நீட்டிக்க மனு


ADDED : மார் 27, 2025 08:17 PM

Google News

ADDED : மார் 27, 2025 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

மனு விபரம்:

சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், காஞ்சிபுரம் அருகே பரந்துாரில் அமைய உள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை பூந்தமல்லியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், பொன்னேரிக்கரை அருகில் சென்னை - பெங்களுரு விரைவு சாலை அமைக்கப்பட்டு வருவதால், பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் ரயில் நிலையத்துடன் இணைத்தால், விமான பயணியர், பரந்துார் விமான நிலையத்திலிருந்து 5 நிமிடத்தில் காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கும், 7 நிமிடத்தில் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கும் வர முடியும்.

எனவே, விமானப் பயணியர் மற்றும் காஞ்சிபுரம் வாசிகள் நலன் கருதி, பரந்துார் மெட்ரோ ரயில் தடத்தை பொன்னேரிக்கரை வழியாக, காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us