sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாக்கடை அடைப்பை நீக்கக்கோரி கமிஷனருக்கு கோரிக்கை மனு

/

சாக்கடை அடைப்பை நீக்கக்கோரி கமிஷனருக்கு கோரிக்கை மனு

சாக்கடை அடைப்பை நீக்கக்கோரி கமிஷனருக்கு கோரிக்கை மனு

சாக்கடை அடைப்பை நீக்கக்கோரி கமிஷனருக்கு கோரிக்கை மனு


ADDED : ஜூன் 11, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருப்புக்கூடல் தெருவில், சாலை அமைக்கும்போது மூடப்பட்ட பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பை நீக்க கோரி, தெருவாசிகள் காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மனு விபரம்:

காஞ்சிபுரம், திருப்புக்கூடல் தெருவில், அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, வீட்டில் கழிவுநீர் வெளியேறாமல் திரும்பி வீட்டிற்குள்ளேயே வருகின்றன. இதுதொடர்பாக பலமுறை மாநகராட்சிக்கு பணம் செலுத்தினோம். இதையடுத்து மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் சாலையை உடைத்து பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை கழிவுநீர் லாரி வாயிலாக அகற்றினர்.

இருப்பினும், எங்கள் பகுதியில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது. திருப்புக்கூடல் தெரு கடைசியில், சாலை அமைக்கும்போது மூடப்பட்ட மேன்ஹோல் அடைப்பை நீக்கினால்தான், இப்பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என, துாய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருப்புக்கூடல் தெருவில், சாலை அமைக்கும்போது மூடப்பட்ட மேன்ஹோலை கண்டறிந்து, அடிக்கடி ஏற்படும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us