/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு
/
வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு
வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு
வயலக்காவூர் ஏரிக்கரையோரம் 3,000 பனை விதைகள் நடவு
ADDED : நவ 17, 2025 08:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயலக்காவூர்: உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் ஏரிக்கரையோரம், 3,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
விதைகள் தன்னார்வ அமைப்பின், ஐந்தாவது ஆண்டாக 'ஒரு லட்சம் பனை விதைகள் நடவு திருவிழா'வின் 11வது கட்ட களப் பணியாக உத்திரமேரூர் அடுத்த, வயலக்காவூர் ஏரிக்கரையோரம், 3,000 பனை விதைகள், முதல் கட்டமாக நேற்று நடவு செய்தனர்.
இதில், விதைகள் தன்னார்வ அமைப்பினருடன், உத்திரமேரூர் 'டீ கடை பென்ச் பாய்ஸ்' இயற்கை பாதுகாப்பு சங்கத்தினர் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனர்.

