/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிளஸ் 1 தேர்வு: தமிழில் 141 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 தேர்வு: தமிழில் 141 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 05, 2024 03:48 AM
காஞ்சிபுரம், : தமிழகம் முழுதும், பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கி, 25ம் தேதி நிறைவு பெறுகின்றன. பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ல் துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் 22ம் தேதி நிறைவு பெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என, மொத்தம், 106 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல், 184 பள்ளிகளைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ - மாணவியர் இந்தாண்டு அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்பு தேர்வுகளுக்கு தலா 54 மையங்களிலும், 10ம் வகுப்பு தேர்வுக்கு 66 மையங்கள் என, 120 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.
இதில், 42,585 மாணவ -- மாணவியர் பிளஸ் 2, பிளஸ் 1, மற்றும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் எழுத உள்ளனர். மார்ச் 1ல், பிளஸ் 2 தேர்வு துவங்கியது.
நேற்று பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுக்கு, 54 தேர்வு மையங்களில், 6,734 மாணவர், 7,392 மாணவியர் என மொத்தம், 14,126 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த தேர்வு மையங்களுக்கு, 54 முதன்மை காப்பாளர்கள், 54 துறை அலுவலர்கள், 5 கூடுதல்துறை அலுவலர்கள், 12 வழித்தட அலுவலர்கள், 100 பறக்கும் படை அலுவலர்கள், 800 அறை கண்காணிப்பாளர்கள், தேர்வில் சொல்வதை எழுதுவோர் 145 பேர் என, 1,170 பேர், பிளஸ் 1 பொதுத்தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்நாள் நேற்று தமிழ் தேர்வில், 141 பேர் தேர்வு எழுத வரவில்லை.

