/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போஸ்டர் ஒட்டி அட்டூழியம் அலங்கோலமான மேம்பாலம்
/
போஸ்டர் ஒட்டி அட்டூழியம் அலங்கோலமான மேம்பாலம்
ADDED : ஏப் 25, 2025 01:37 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் அருகில், 54.36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ரயில்வே மேம்பாலம் 2022 ஏப்., 7 ல் திறக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், மேம்பாலத்தின் தடுப்புச்சுவரின் இருபுறமும் அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் ‛போஸ்டர்' ஒட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் மேம்பாலத்தின் சுவர்கள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும், வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், மேம்பால சுவரில் இருபுறமும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பால சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

