sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி

/

கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி

கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி

கார் மோதி உடைந்த மின்கம்பம் மின்சாரம் துண்டிப்பால் அவதி


ADDED : நவ 16, 2024 12:54 AM

Google News

ADDED : நவ 16, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று காலை ஒரகடத்தில் இருந்து வண்டலுார் நோக்கி சென்ற கார், செரப்பனஞ்சேரி, அண்ணா தெரு அருகே திரும்பிய போது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

இதில், மின்கம்பம் உடைந்து சாலையோரம் சாய்ந்தது. காரின் முன்பகுதி சேதமடைந்தது. இதையடுத்து, கார் ஓட்டுனர் அங்கிருந்து காருடன் தப்பினார். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதன்பின், மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதனால், அண்ணா தெரு, மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், காலை 7 மணி முதல் மாலை வரை ஏற்பட்ட மின்தடையால், அப்பகுதியினர் கடும் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us