ADDED : டிச 29, 2024 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது.
சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை 5:00 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தன.
திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில், உள்ளாவூர் அகத்தீஸ்வரர் கோவில், கோவிந்தவாடி கைலாச நாதர், தேவரியம்பாக்கம்கேதார கவுரீஸ்வரர், வேளியூர் உதயகிரிஸ்வரர்,விஷகண்டிகுப்பம்சக்தீஸ்வரர் ஆகிய கோவில்களில் சனிப்பிரதோஷம் நடந்தன.