sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சார் பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்

/

சார் பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்

சார் பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்

சார் பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் இடைத்தரகர் ஆதிக்கம்


ADDED : அக் 25, 2024 10:30 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் இணை சார் -- பதிவாளர் அலுவலகங்கள், காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு, தினமும் ஏராளமானோர் வில்லங்க சான்றிதழ், திருமண பதிவு சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகள் பெற வருகின்றனர்.

மேலும், பத்திரப்பதிவு, தானம், பாகப்பிரிவினை, உயில், பொது அதிகார பத்திரம், அடமானம் போன்றவற்றை பதிவு செய்வதற்கும் வருகின்றனர்.

பொதுமக்கள் நேரடியாக சென்று பதிவு செய்வதை காட்டிலும், இடைத்தரகர் மூலம் சென்றால் தான் வேலைகள் விரைவாக முடிவதாக புகார் தெரிவிக்கின்றனர். சான்றுகள் கோரி முறையாக அலுவலகத்தில் மனு அளித்தாலும், முறையாக பதில் அளிப்பதில்லை.

ஒரே கட்டடத்தில் இரண்டு சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் கணிசமான தொகை கொடுத்தால் மட்டுமே வேகமாக வேலை நடப்பதாக தெரிவிக்கின்றனர்.

பத்திரப்பதிவு துறையில் பெரும்பாலான சேவைகள் ஆன்லைனில் கொண்டு வந்தாலும், இடைத்தரகர்கள் மூலமாக சென்றால் மட்டுமே பணிகள் விரைந்து நடக்கிறது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, சார் - -பதிவாளர் அலுவலகத்தில் நடமாடும் இடைத்தரகர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us