/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் - லாரி மோதி தனியார் ஊழியர் பலி
/
பைக் - லாரி மோதி தனியார் ஊழியர் பலி
ADDED : டிச 03, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் துர்கா சரண் நாயக், 35. தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலை, 'ஹீரோ' இருசக்கர வாகனத்தில்,மதுரவாயலில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பெங்களூரு நோக்கி சென்ற 'அசோக் லேலண்ட்' லாரி, இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே துர்கா சரண் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.