sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.3,000 கட்டணத்தில் தனி ரூம்கள்

/

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.3,000 கட்டணத்தில் தனி ரூம்கள்

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.3,000 கட்டணத்தில் தனி ரூம்கள்

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.3,000 கட்டணத்தில் தனி ரூம்கள்


ADDED : ஜன 31, 2024 10:40 PM

Google News

ADDED : ஜன 31, 2024 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 'ஏசி'யுடன் கூடிய கட்டண வார்டு திறக்கப்பட்டுள்ளது.

சென்னை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 30.5 கோடி ரூபாய் மதிப்பில், 'ஏசி'யுடன் கூடிய கட்டண வார்டு, 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 10 அறுவை சிகிச்சை அரங்குகளை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.

பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

மருத்துவமனை கட்டட பணிகளுக்கு, 380 கோடி ரூபாய் செலவு செய்திருந்தாலும், அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களுக்கு இதுவரை, 452 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதயம், சிறுநீரகவியல் உள்ளிட்ட 19 துறைகள் இயங்கி வருவதுடன், 20 அதிநவீன டயாலிசிஸ் கருவிகள், 4,000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன.

இம்மருத்துவமனையில், 1.05 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 20,021 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும், 792 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே, மருத்துவமனை துவக்கப்பட்ட ஆறு மாதத்தில், அதிக அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், 'டபுள் பலுான் எண்டோஸ்கோப்பி, ஆட்டோ எம்.ஆர்.ஐ.,' போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன. 6.74 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன இதய 'கேத்லேப்' ஆய்வகமும் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது 1,200, 2,000, 3,000 ரூபாய் என்ற கட்டணத்தில், தனியறையுடன் கூடிய கட்டண வார்டு துவக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சென்னை மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மக்கள் வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us