/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : அக் 14, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், -நெய்யாடுபாக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
உத்திரமேரூர் தாலுகா, நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 'சுந்தரவடிவேலனார் சமத்துவ சமுதாய அறக்கட்டளை' சார்பில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரவடிவேல் 113-வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், அறக்கட்டளை தலைவர் லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.