/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
/
காஞ்சி வரதர் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
ADDED : மே 21, 2025 08:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவு பெற்றது.
நேற்று, விடையாற்றி உத்சவம் துவங்கியது. இதில், மூன்றாம் நாளான நாளை, மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது.
இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் உலா வருவார்.