/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம் விமரிசை
/
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம் விமரிசை
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம் விமரிசை
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம் விமரிசை
ADDED : மார் 07, 2024 01:01 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சிஅம்மன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், காலை, மாலையில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். கடந்த மாதம் 25ல் தங்க காமகோடி விமானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
தொடர்ந்து பிப்., 26ல் விடையாற்றி உற்சவம் துவங்கியது. இதில், தினமும் இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதில், எட்டாம் நாளன்று சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது.
விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.
இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.

