/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராகவேந்திர ஸ்வாமி ப்ருந்தாவனம் 5 வது ஆண்டு விழா
/
ராகவேந்திர ஸ்வாமி ப்ருந்தாவனம் 5 வது ஆண்டு விழா
ADDED : ஜன 28, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு மாட வீதியில் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமி மந்திராலயத்தின் கிளை மடம் இயங்கி வருகிறது. இங்கு ப்ருந்தாவன ப்ரதிஷ்டாபன ஐந்தாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி நேற்று நிர்மால்ய விஸர்ஜனம், பஞ்சாம்ருதாபிஷேகம், கலசஸ்தாபனா, புன்யார்ச்சனா, கணபதி, லஷ்மி ஸுதர்சன மற்றும் வாஸ்து ஹோமம் உள்ளிட்டவையும் நடந்தது.
காலை 11.00 மணிக்கு கனகாபிேஷகம், பூஜை, துளசி அர்ச்சனை உள்ளிட்டவை நடந்தது. வெள்ளிகவச அலங்காரத்தில் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

