sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் நோய் அபாயம்

/

சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் நோய் அபாயம்

சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் நோய் அபாயம்

சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் நோய் அபாயம்


ADDED : ஜன 01, 2025 12:33 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ராஜாஜி மார்க்கெட் அருகில் மழைநீர் முழுமையாக வெளியேறும் வகையில், வழித்தடம் அமைக்காததால் சாலையோரம் மழைநீர் குளம்போல தேங்குவது வாடிக்கையாக உள்ளது.

இதனால், மழைநீர் முழுமையாக வெளியேறும்வகையில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நான்கு மழைநீர் உறிஞ்சு குழிகளையும் முறையாக பராமரிக்காததால், குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு துார்ந்த நிலையில் உள்ளது.

சாலையோரம் தேங்கியுள்ள மழைநீரால், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்லும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நாள்கணக்கில் தேங்கும் மழைநீரில் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியானால், காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, ரயில்வே சாலையில் மழைநீர் முழுதும் வெளியேறும் வகையில், வடிகால்வாயையும், மழைநீர் உறிஞ்சு குழிகளையும் சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஒன்றிணைந்து நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us