sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் ராமநவமி உத்சவம் விமரிசை

/

காஞ்சியில் ராமநவமி உத்சவம் விமரிசை

காஞ்சியில் ராமநவமி உத்சவம் விமரிசை

காஞ்சியில் ராமநவமி உத்சவம் விமரிசை


ADDED : ஏப் 07, 2025 02:24 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்'காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில், ராமநவமி உத்சவம் நேற்று நடந்தது. இதில், நேற்று காலை 11:00 மணிக்கு ராமபிரானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி தீர்த்தம் கோஷ்டி வினியோகமும், மாலை கண்ணாடி அறையில் சேவை ஆஸ்தானம் நடந்தது. இதில், ராமர், லட்சுமணர், சீதா, ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

காஞ்சிபுரம் விளக்கொளிபெருமாள் கோவிலில் நடந்த ராமநவமி விழாவில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தீபபிரகாசர் என அழைக்கப்படும் விளக்கொளி பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம், ஓரிக்கை, ராணுவ சாலை, முல்லை நகர், தாமரை வீதியில் அமைந்துள்ள பக்த ஆஞ்சநேயர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் ஆண்டு ராமநவமி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று, காலை 8:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு யாகம், சீதா ராம திருக்கல்யாண உத்சவம் நடந்தது.

காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், கோதண்டராமர் பஜனை கோவிலில், ராமநவமி உத்சவம் கடந்த மாதம் 27 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவாளர்கள் தினமும், இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவாற்றினர்.

நேற்று காலை ராமநவமி ஏகதின லட்சார்ச்சனையும், மாலை சீதா ராமர் திருக்கல்யாண உத்சவமும் தொடர்ந்து, அனுமந்த வாகனத்தில் புறப்பாடும் நடந்தது.

இன்று, காலை 6:00 மணிக்கு கோபூஜையும், இரவு 7:00 மணிக்கு அனுமனின் அற்புதங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவும், 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் சேவை உத்சவமும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us