/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
/
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 164 மனுக்கள் மீது உடனடி தீர்வு
ADDED : அக் 19, 2024 11:43 PM

காஞ்சிபுரம்:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவிநியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அக்., மாதத்திற்கான பொதுவிநியோக குறைதீர் கூட்டம், ஐந்து தாலுகாவிலும் இருளர் குடியிருப்புகளில் பிரத்யேகமாக நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் தாலுகாவில் சிங்காடிவாக்கம் கிராமம், உத்திரமேரூரில் மலையாங்குளம், வாலாஜாபாதில் ஊத்துக்காடு, ஸ்ரீபெரும்புதுாரில் காட்ரம்பாக்கம், குன்றத்துாரில் படப்பை என, ஐந்து தாலுகாவிலும் நடந்த பொதுவிநியோக குறைதீர் கூட்டம் அனைத்தும் இருளர் குடியிருப்பில் நேற்று நடந்தது.
இதில், அனைத்து தாலுகாவிலும் நடந்த குறைதீர் கூட்டத்தில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் உள்ளிட்ட 186 மனுக்கள் வரப்பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 164 மனுக்களுக்கு குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள 22 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.