/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 139 மனுக்களுக்கு உடனடி தீர்வு
/
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 139 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 139 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ரேஷன்கார்டு குறைதீர் கூட்டம் 139 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : பிப் 09, 2025 08:51 PM
காஞ்சிபுரம்,:உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொது வினியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, பிப்., மாதத்திற்கான குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் கருப்படிதட்டடை கிராமம், உத்திரமேரூரில் பெருங்கோழி, வாலாஜாபாதில் மாகரல், ஸ்ரீபெரும்புதுாரில் பால்நல்லுார், குன்றத்துாரில் நாவலுார் என, ஐந்து தாலுகாவிலும் குறைதீர் கூட்டம், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு நடந்தது.
இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் ஐந்து தாலுகாவிலும், 151 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 139 மனுக்களுக்கு குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 12 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.

