
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகம்பம் சோமவார அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவிலில், குருவாரத்தையொட்டி திருமுறை பாராயணம் நேற்று நடந்தது.
இதில் மன்ற அமைப்பாளர் சிவபிரேமா தலைமையில், சிவ பக்தர்கள் திருமுறை பாராயணத்தில் உள்ள பாடல்களை பாராயணம் செய்தனர். முன்னதாக அமரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீப ஆராதனை நடந்தது.

