ADDED : மார் 17, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:மணிமங்கலம் அடுத்த ஆதனுாரைச் சேர்ந்தவர் கலையரசன், 25; கார் ஓட்டுனர்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான இவர், இரு தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் கலையரசனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆதனுாரில் உள்ள கால்வாயில் அவரது உடல் மிதந்தது. மணிமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, கால்வாயில் மிதந்த உடலை மீட்டனர்.
போதையில் கால்வாயில் தவறி விழுந்து, கலையரசன் இறந்ததாக மணிமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.

