/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வட்டார கல்வி அலுவலகம் படப்பையில் திறப்பு
/
வட்டார கல்வி அலுவலகம் படப்பையில் திறப்பு
ADDED : டிச 10, 2025 08:02 AM

குன்றத்துார்: படப்பையில் புதிதாக கட்டப்பட்டுள்ள, குன்றத்துார் வட்டார கல்வி அலுவலகம், நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது.
குன்றத்துார் வட்டார கல்வி அலுவலகம் படப்பையில் உள்ளது. இந்த அலுவலகம் சேதமானதால், புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சாய்ராம் கல்வி குழுமம் சார்பில், 2,219 சதுர அடியில், 90 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம், அதே இடத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், புதிய வட்டார கல்வி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதில், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, சாய்ராம் கல்வி குழுமத் தலைவர் சாய் பிரகாஷ், குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல, கரசங்கால், நாட்டரசன்பட்டு, மணிமங்கலம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம், சென்னகுப்பம், பூந்தண்டலம், ஆதனுார், திருமுடிவாக்கம் பகுதியில் புதிய நியாயவிலை கடை கட்டடம், நடுவீரப்பட்டில் தானிய கிடங்கு கட்டடம் என, 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.

