sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

/

 வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

 வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

 வெள்ளை நிற தர்பை பூக்களால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்


ADDED : டிச 10, 2025 08:02 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் பூத்திருக்கும் தர்பையில் விளையும் வெள்ளை நிற பூக்களால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், திருத்தணி - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் இருவழி சாலை, 448 கோடி ரூபாய் செலவில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

இதில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரத்தில், நாணல், தர்பை ஆகிய இரு விதமான புல்கள் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ளன. இந்த தர்பை புல்லில் பூத்திருக்கும் வெள்ளை நிற பூ உதிர்ந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.

குறிப்பாக, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், கோவிந்தவாடி, பெரியகரும்பூர், விஷகண்டிகுப்பம் உள்ளிட்ட ஏரிநீர் வரத்துக் கால்வாய் மற்றும் ஏரியை ஒட்டிய பகுதிகளில் தர்பை புல்லின் பூக்கள் பறக்கின்றன.

இதனால், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, கண் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. மேலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

எனவே, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரம் பூத்திருக்கும் தர்பையில் விளைந்துள்ள வெள்ளை நிற பூக்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us