/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைப்பு
/
குடிநீர் குழாய் உடைப்பால் சேதமான சாலை சீரமைப்பு
ADDED : பிப் 06, 2025 12:59 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பிரதான சாலைகளான காந்தி சாலை, சங்கரமடம் அமைந்துள்ள சாலை தெரு வழியாக செங்கல்பட்டு, செய்யாறு, வந்தவாசி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கோயம்பேடு, வேலுார், பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமான சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம் நிறைந்த இச்சாலைகளில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த மாதம் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்தனர். இருப்பினும், பள்ளம் தோண்டிய இடத்தில் முறையாக தார் ஊற்றி சீரமைக்கவில்லை.
இதனால், சாலை சேதமடைந்த பகுதியில், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், சேதமடைந்த சாலையை தார் ஊற்றி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், குடிநீர் குழாய் சீரமைப்புக்காக, மாநகராட்சி ஊழியர்கள் சேதப்படுத்திய காந்தி சாலை மற்றும் சாலை தெருவில் சேதமடைந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று தார் ஊற்றி சீரமைத்தனர்.