/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண்திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க கோரிக்கை
/
மண்திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க கோரிக்கை
மண்திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க கோரிக்கை
மண்திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 05, 2024 11:43 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி திருவீதிபள்ளம், எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையோரம், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண்திட்டுகளால் அடைப்பு ஏற்பட்டு துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் தேங்கியுள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடும் சூழல் உள்ளது. எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவீதிபள்ளத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.