/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லிங்காபுரம் சாலை பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
/
லிங்காபுரம் சாலை பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
லிங்காபுரம் சாலை பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
லிங்காபுரம் சாலை பள்ளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 23, 2025 01:08 AM

வாலாஜாபாத்,:காஞ்சிபுரம்- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அடுத்து சங்கராபுரம் கூட்டுச்சாலை உள்ளது.
இப்பகுதியில் இருந்து, சங்கராபுரம், லிங்காபுரம் உள்ளி கிராமங்கள் வழியாக தேவேரியம்பாக்கம்
செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
சங்கராபுரம் சுற்று வட்டார கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், சங்கராபுரம் அடுத்தலிங்காபுரத்தில் இருந்து, தேவேரியம்பாக்கம்வரையிலான 2 கி.மீ., தூரம் கொண்ட சாலைமிகவும் பள்ளமாக உள்ளது.
இதில், லிங்காபுரம் விவசாய நிலங்களுக்கு மத்தியிலான ஒரு பகுதி சாலை, மேடானதாகவும், அதையொட்டி உள்ள விவசாய நிலங்கள் தாழ்வானதாக காணப்படுகிறது.
குறுகியதான இச்சாலையில் அபாயகரமான வளைவும் உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். சில நேரங்களில் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
எனவே, இச்சாலையோர பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படாமல் தவிர்க்கவும் வகையில், இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.