sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

/

பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

பாதியில் விடப்பட்ட கால்வாய் பணி விரைந்து முடிக்க கோரிக்கை


ADDED : ஆக 02, 2025 11:14 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அய்யங்கார்குளம்:அய்யங்கார்குளம் ஊராட்சியில், ஆக்கிரமிப்பு காரணமாக பாதியில் விடப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி, கீழாண்ட தெரு மற்றும் நடுத்தெரு, கங்கையம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், கீழாண்டை தெருவிற்கும், நடுத்தெருவிற்கும் இடையே 1-00 மீட்டர் நீளத்திற்கு, கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்தது.

சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக, கால்வாய் கட்டுமானப் பணி, பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால், பருவ மழைக்காலத்தில், குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழும் நிலை உள்ளது. இதனால், வடிகால்வாய் அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.

எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாய் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அய்யங்கார்குளம் ஊராட்சியில், கால்வாய் கட்டுமானப் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us