/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதர் மண்டிய கால்வாயை சீரமைக்க கோரிக்கை
/
புதர் மண்டிய கால்வாயை சீரமைக்க கோரிக்கை
ADDED : அக் 02, 2024 11:26 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில், பண்ருட்டி பிரதான சாலையில், அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளதால், கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் சாலையிலும், அப்பகுதியில் உள்ள வீடுகளையும் சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.