sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமடைந்த நெற்களம் சீரமைக்க கோரிக்கை

/

சேதமடைந்த நெற்களம் சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த நெற்களம் சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த நெற்களம் சீரமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 18, 2025 12:54 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மேனலூர் ஊராட்சியில், பாரதிபுரம் துணை கிராமம் உள்ளது. இங்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில், 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில், அறுவடை செய்யப்படும் நெல், வேர்க்கடலை ஆகியவற்றை உலர்த்த, 22 ஆண்டுக்கு முன் நெற்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, நெற்களம் முறையாக பராமரிப்பு இல்லாமல், தடுப்புச்சுவர் சேதமடைந்து உள்ளது. மேலும், நெற்கள தரை உடைந்த நிலையிலும் உள்ளது.

இதனால், விவசாயிகள் நெல் மற்றும் வேர்க்கடலையை உலர்த்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், விளைபொருட்களை உலர்த்த போதிய இடம் இல்லாததால், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று உலர்த்தி வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நேர விரயம் ஏற்பட்டு வருகிறது.

எனவே, சேதமடைந்த நெற்களத்தை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us