sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திருமுக்கூடல் சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

/

திருமுக்கூடல் சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

திருமுக்கூடல் சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

திருமுக்கூடல் சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை


ADDED : அக் 22, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமுக்கூடல் அக். 23-: திருமுக்கூடலில் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலை பழையசீவரத்தில் இருந்து, திருமுக்கூடல் வழியாக சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது.

இச்சாலையில், திருமுக்கூடல் மின் அலுவலகம் எதிரே வளைவு பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

மழை நேரங்களில் இச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அச்சமயம், அச்சாலை வளைவில் வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் இச்சாலை பள்ளத்தால் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சாலையில் தேங்கும் மழைநீரால் கொசு உற்பத்தி உள்ளிட்ட சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைத்து அப்பகுதியில் கான்கிரிட் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us