/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான நடைபாதை சீரமைக்க கோரிக்கை
/
சேதமான நடைபாதை சீரமைக்க கோரிக்கை
ADDED : பிப் 17, 2025 01:28 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் வாகனங்கள் குருவிமலை கிராமம் வழியாக செல்கிறது. இதில், குருவிமலை கிராம சாலையோரம் சிமென்ட் கல் பாதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக அதிகபாரம் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களால், சிமென்ட் கற்கள் உடைந்து நடைபாதை சேதடைந்து மேடு பள்ளங்களுடன் மண் சாலையாக மாறியுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், குருவிமலையில் சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.