sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

/

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் அச்சத்தில் குடியிருப்புவாசிகள்


ADDED : நவ 04, 2024 03:44 AM

Google News

ADDED : நவ 04, 2024 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு பள்ள காலனி, சிங்கார வேலன் தெருவில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், தெரு மின்விளக்கு வெளிச்சத்திற்காகவும் சாலையோரம் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால், கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மற்றும் இறந்தவர்களின் இறுதிச்சடங்கின்போது, மின்கம்பியில் வாகனம் உரசும் அபாய நிலை உள்ளது.

இதன் காரணமாக, நீளமான குச்சி வாயிலாக மின்கம்பியை உயரமாக துாக்கி பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதில், நிலைதடுமாறினால், மின்விபத்து ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, செவிலிமேடு பள்ள காலனியில் உள்ள சிங்காரவேலன் தெருவில், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரியத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us