sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு

/

மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு

மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு

மாநகராட்சி குப்பை கிடங்கு தொடர்ந்து எரிவதால் சுற்றுப்புறத்தினருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு


ADDED : மே 06, 2025 12:38 AM

Google News

ADDED : மே 06, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 1,025க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகள் வணிக கட்டடங்களில் இருந்து குப்பை சேகரிக்கும் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. இதில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பை, திருவீதிபள்ளம் பகுதியில் மலை போல கொட்டப்பட்டு வருகிறது

இந்த குப்பை அடிக்கடி தீப்பிடித்து எரிவதால், குப்பையில் இருந்து வெளியேறும் புகை திருவீதிபள்ளம், திருக்காலிமேடு, அரிஹந் அவென்யூ உள்ளிட்ட பகுதியில் பரவுகிறது.

இதனால், இப்பகுதியில் வசிப்போருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்றவை ஏற்படுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குப்பை கிடங்கை சுற்றி வசிப்பவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால், திருவீதிபள்ளம் முழுதும் புகை மண்டலமாக மாறியது. இதனால், அப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று காலை, அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் சந்துரு, மாநகராட்சி கமிஷனரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து கமிஷனர் நவேந்திரன், மாநகர சுகாதார அலுவலர் அருள்நம்பி மற்றும் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் திருவீதிபள்ளம் குப்பை கிடங்கிற்கு ஆய்வு செய்ய சென்றனர்.

அப்போது, வார்டு கவுன்சிலர் சந்துரு மற்றும் அப்பகுதிவாசிகள், குப்பை கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீயால் குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை உடனடியாக அணைக்க வேண்டும். மீண்டும் தீப்பிடிக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து அப்பகுதிவாசிகளிடம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் பேசியதாவது:

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குப்பை கிடங்கிற்கு தீ வைப்பவர்களை கண்டறிய இப்பகுதியில், 'சிசிடிவி' கேமராக்கள் வைக்கப்படும். மீண்டும் தீப்பிடிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீயணைப்பு துறையினர் புலம்பல்

திருவீதிபள்ளம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த தீயணைப்பு துறையினர் கூறியதாவது:மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து என, வாரத்திற்கு இரு முறை அழைப்பு வருகிறது. இங்கு வந்தால், பல்வேறு இடங்களில் தீப்பற்றி புகை மட்டுமே வருகிறது. எந்த இடத்தில் தீயை அணைக்க வேண்டும் என்பதை தெரிவிப்பததற்கு கூட மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை.நாங்களாகவே கண்டறிந்து தீயணை அணைக்க வேண்டிய நிலை உள்ளது. குப்பையை குவியலாக கொட்டும்போது, 20 அடிக்கு இடைவெளி விட்டு குப்பை கொட்டினால் தீ பரவாது.இடைவெளி இல்லாமல் மலைபோல குப்பையை கொட்டுவதால், ஒரு இடத்தில் தீபிடித்தால் பிற பகுதிக்கும் எளிதில் தீ பரவி விடுகிறது.வாரத்திற்கு இருமுறை குப்பை கிடங்கில் ஏற்படும் தீயை அணைக்க குப்பை கிடங்கிற்கு நாங்கள் வந்துவிடுவதால், கோடைக்காலம் துவங்கியுள்ளதால், குடியிருப்பு பகுதியில் ஏற்படும் தீவிபத்திற்கு எங்களால் உடனடியாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, குப்பை கிடங்கில் குப்பையை கொட்டும்போது இடைவெளி விட்டு குப்பை கொட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us