sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீடிக்க தீர்மானம்

/

ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீடிக்க தீர்மானம்

ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீடிக்க தீர்மானம்

ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீடிக்க தீர்மானம்


ADDED : ஜன 30, 2024 04:34 AM

Google News

ADDED : ஜன 30, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : ஊராட்சி தலைவர்களின் பதவி காலம், ஐந்து ஆண்டுகளாக உறுதி செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், நேற்று நடந்த கூட்டத்திற்கு, வாலாஜாபாத் வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார்.

கூட்டமைப்பு செயலர் வள்ளியம்மாள், பொருளாளர் லெனின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள் உள்ளன. 202௧ல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் பதவிக்காலம், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது என, சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ஊராட்சி தலைவரின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் வரையில் வழங்க வேண்டும். மேலும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி ஊராட்சி தலைவர்களுக்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, ஊராட்சி தலைவர்கள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.






      Dinamalar
      Follow us