sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்

/

 கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்

 கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்

 கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம்


ADDED : நவ 18, 2025 04:20 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில், காரணித்தாங்கலில் உள்ள கட்டடங்களின் மீது வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்கிக் கொண்டு இருக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

வண்டலுார் - வாலாஜாபாத் சாலையை பயன்படுத்தி, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம், ஒரகடம், வல்லக்கோட்டை, செரப்பனஞ்சேரி, காரணித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள் சாலையில் விழுவதால் விபத்தும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், ஒரகடம் அருகே, காரணித்தாங்கல் பகுதியில், சாலையோரம் உள்ள கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் காற்றில் கிழிந்து அந்தரத்தில் தொங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us