sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையில் படர்ந்த கருவேல மரங்களால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்

/

சாலையில் படர்ந்த கருவேல மரங்களால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்

சாலையில் படர்ந்த கருவேல மரங்களால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்

சாலையில் படர்ந்த கருவேல மரங்களால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்


ADDED : அக் 13, 2024 01:08 AM

Google News

ADDED : அக் 13, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கத்தில் இருந்து, நீர்குன்றம் செல்லும் சாலை உள்ளது. பட்டா, சிறுதாமூர், நீர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் இச்சாலையை பயன்படுத்தி படூர் கூட்டுச்சாலை வழியாக உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், நீர்குன்றம் - ஆனம்பாக்கம் வரையிலான சாலையோரத்தின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அதிக அளவு வளர்ந்து படர்ந்துள்ளன.

இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இச்சாலையில் இருள் சூழ்ந்துள்ளதால் சீமைகருவேல மரங்கள் வாகன ஓட்டிகள் உடலை பதம் பார்க்கின்றன. அவ்வப்போது விபத்து அபாயங்களும் ஏற்படுகின்றன.

எனவே, நீர்குன்றம்- - ஆனம்பாக்கம் சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us